ஆர்.எம்.சி.யார்டு காவல் சரகத்தில் கூலித் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சஞ்சய் காந்தி நகர் ஏபிஎம்சி யார்டு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டா (20). கூலித் தொழிலாளியான இவரிடம் திங்கள்கிழமை நள்ளிரவு மது அருந்திய நிலையில் வந்த 3 பேர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, மணிகண்டாவை அவர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து ஆர்.எம்.சி.யார்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.