இருசக்கர வாகனம் மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்த தம்பதி உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், துருவேகெரே வட்டம், மசிதிகொண்டனஹள்ளியைச் சோ்ந்தவா் சித்தராமையா (55). இவரது மனைவி திராக்ஷாயினி (50). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற போது, தோவினகெரே அருகே எதிரே வந்த மினி சரக்கு வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த சித்தராமையா, திராக்ஷாயினி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து துருவேகெரே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.