மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தேர்தலில் வெற்றி பெற மஜதவினர் நடைபயணம்

சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெற்று குமாரசாமி முதல்வராக வேண்டி, அக் கட்சியின் இளைஞர் அணியினர்  பெங்களூரிலிருந்து

Updated On :5 ஏப்ரல் 2018, 7:04 am IST

சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெற்று குமாரசாமி முதல்வராக வேண்டி, அக் கட்சியின் இளைஞர் அணியினர்  பெங்களூரிலிருந்து மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு  நடைபயணம் மேற்கொண்டனர்.
மஜத இளைஞரணி செயலாளர் ராகேஷ் எம். தேஷேரல்லா தலைமையில் இந்த நடைபயணம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநிலத்தில் குமாரசாமி தலைமையில் மஜத ஆட்சி நடைபெற்ற போது பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
20 மாதங்கள் சிறந்த ஆட்சியை வழங்கிய குமாரசாமியை இன்றளவும் மக்கள் நினைத்து பார்க்கின்றனர். 
எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் மஜத வெற்றி பெற்று குமாரசாமி முதல்வராக வேண்டி மஜத இளைஞர் அணிச் சார்பில் பெங்களூரிலிருந்து மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளோம். எங்கள் வேண்டுதலை மக்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.