அஞ்சல் சேவைகள் குறைதீர் முகாம் பெங்களூரில் ஜூலை 20-இல் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலக மாநாட்டு அரங்கில் ஜூலை 20-ஆம் தேதி மாலை 3 மணி அளவில் அஞ்சல்சேவைகள் குறைதீர்முகாம் நடத்தப்படுகிறது. பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அதிகாரி முகாமில் பங்கேற்று குறைகளைக் கேட்டறிகிறார்.
பெங்களூரு மண்டலத்தை சேர்ந்தோர் தங்களது குறைகளை எழுதி, உதவி இயக்குநர் (அஞ்சல் இயக்கம்), தலைமை அஞ்சல் அதிகாரி, கர்நாடக அஞ்சல் வட்ட அலுவலகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
புகார்களை tech.ka@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். புகார்களுடன் ஆதாரங்களை இணைப்பது நல்லது. மேலும் புகார் கடிதத்தில் தெளிவான தொடர்புமுகவரியை குறிப்பிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவையில் நிதின் நவீன் உள்பட புதிய எம்பிக்கள் பதவியேற்பு!

நாசிக் டிசிஎஸ் அலுவலகத்தில் தங்களுக்கு நடந்தது என்ன? கண்ணீருடன் பெண்கள்!

முத்துராமலிங்கம் படத்தில் நடித்ததற்கு வருத்தப்படுகிறேன்: கௌதம் ராம் கார்த்திக்

அமெரிக்காவில் நடைபெறும் உலகக் கோப்பையில் ஈரான் பங்கேற்கும்..! ஃபிஃபா தலைவர் உறுதி!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

