பெங்களூரில் ஜாதக பரிவர்த்தனைக் கூட்டம்

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 31) ஜாதக பரிவர்த்தனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
Updated on
1 min read

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 31) ஜாதக பரிவர்த்தனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து வணிக வைசிய சங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வணிக வைசிய சங்கம் சார்பில் பெங்களூரு, லட்சுமிபுரம், சி.எம்.எச்.சாலையில் உள்ள ஸ்ரீசிவானுபவ கல்யாண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் வாணிய செட்டியார் சமுதாயத்தினருக்கான 48-ஆவது ஜாதக பரிவர்த்தனைக் கூட்டம்
நடக்கவிருக்கிறது.
சங்கத்தின் இணைச் செயலாளர் வி.இ.கே.கண்ணன் மேற்பார்வையில் நடக்கும் இக்கூட்டத்தை சிறப்பு விருந்தினர்கள் தனபால், ஜி.சுந்தரமூர்த்தி, கணேசன், ரவிக்குமார், ஜி.பாபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைக்கின்றனர். சங்கச் செயலாளர் வி.ஜி.சங்கர் வரவேற்கிறார்.
சங்கத் தலைவர் வி.இ.இ.லட்சுமணன் தலைமை தாங்கிறார். எஸ்.கந்தசாமி தொகுத்து வழங்குவார். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் வரன்களின் ஜாதகம், குடும்பவிவரம், புகைப்படம் உள்ளிட்டவிவரங்களை அளித்து பதிவுசெய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-25300277, 9449251500 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com