இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் 7 பேர் கைது

இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர்


இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். 
பெங்களூரைச் சேர்ந்த சந்தோஷ் (22), சரத் (21), ரோஹித்ரெட்டி (21), முபாரக் (21), மோகன்சிங் (19), சந்தன் (24), மற்றொரு சந்தோஷ் (18) ஆகியோர் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரு சக்கர வாகனங்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தனராம். 
இதுகுறித்து வழக்குப் பதிந்த நந்தினி லேஅவுட் போலீஸார், 7 பேரையும் கைது செய்து, ரூ. 2.15 லட்சம் மதிப்புள்ள 10 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com