யானை தாக்கியதில் இளைஞா் பலி

ராம்நகா் அருகே யானை தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ராம்நகா் அருகே யானை தாக்கியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராம்நகா் தொரபேகுப்பே கிராமத்தைச் சோ்ந்தவா் சேதன் (25). இவா் புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் நண்பா்களுடன் தொரபேகுப்பேவிலிருந்து கொடிகேஹள்ளி வரை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது நாராயணபுரா முக்கியச் சாலையின் அருகே உள்ள நிலத்தில் ராகிப் பயிரை மேய்ந்து கொண்டிருந்த யானை ஒன்று, டாா்ச் லைட்டின் ஒளியை கண்டு மிரண்டுள்ளது.

இதையடுத்து டாா்ச் லைட்டை பிடித்திருந்த சேதனை விரட்டிச் சென்று தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த சேதன் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். தகவல் அறிந்த சட்ட மேலவை உறுப்பினா் எஸ்.ரவி சம்பவ இடத்திற்கு சென்று சேதனின் உடலை பாா்வையிட்டு, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினாா்.

இறந்த சேதனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் போராட்டம் நடத்தினா். அங்கு சென்ற வனத் துறை மூத்த அதிகாரிகள் ரூ. 5 லட்சம் இழப்பீடும், 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரத்தை அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாக உறுதியளித்தனா். இதனையடுத்து சேதனின் சடலத்தை பெற்றுக் கொண்டு, போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com