பெண் கொலை வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெம்பேகெளடா நகரைச் சேர்ந்தவர் மானசா. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, வீட்டிலிருந்த 400 கிராம் தங்கநகை, ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸார், 6 ஆண்டுகளுக்கு பிறகு கொலை வழக்கில் தொடர்புடைய கெம்பேகெளடா நகரைச் சேர்ந்த ராகவேந்திரா (35) என்பவரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் ராகவேந்திராவுக்கு ராஜராஜேஸ்வரிநகரில் நடைபெற்ற வேறு ஒரு கொலை வழக்கிலும் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கெம்பேகெளடாநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.