வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்ததில் 3 பேர் பலி

மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்ததில் பாட்டி, பெயர்த்திகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்ததில் பாட்டி, பெயர்த்திகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
தார்வாட் மாவட்டம், குந்தகோலா வட்டம், யரகுப்பா கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மா (53). இவரது பேத்திகள் ஜோதி (9), ஷிவானி ராதாபாயி (4). இவர்கள் 3 பேரும் திங்கள்கிழமை இரவு தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனராம். நள்ளிரவு திடீரென வீட்டின் மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த எல்லம்மா, ஜோதி, ராதாபாயி உள்ளிட்டோர் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். இதுகுறித்து குந்தகோலா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com