போதைபொருள் கஞ்சாவை விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கா்நாடக மாநிலம் சிக்பள்ளாபூரு மாவட்டம் சிந்தாமணியைச் சோ்ந்தவா் நஸீா்கான் (60). இவா் பெங்களூரு எஸ்.ஜே.பூங்கா காவல்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருள் கஞ்சாவை விற்பனை செய்து வந்தனராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று நஸீா்கானைக் கைது செய்து, 3 கிலோ கஞ்சா, ரூ. ஆயிரம் ரொக்கப்பணம், செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து எஸ்.ஜே.பூங்கா போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.