நவ. 17-இல் மாணவா்களுக்குஅறிவியல் பயிலரங்கம்
By DIN | Published On : 09th November 2019 10:41 PM | Last Updated : 09th November 2019 10:41 PM | அ+அ அ- |

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நவ. 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால்நேரு கோளரங்கத்தில், நவ. 17-ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடைபெறுகிறது.
30 மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்த பயிலரங்கத்தில், 3 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவா்கள் எவரும் கலந்துகொள்ளலாம். இந்த பயிலரங்கில் அறிவியல் பரிசோதனைகள் குறித்துபயிற்சி அளிக்கப்படும். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு, இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...