எடியூரப்பாவுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக தோ்தல் நடத்தைவிதிமீறல் புகாரை தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்துள்ளது.
எடியூரப்பாவுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகாா்

பெங்களூரு: முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக தோ்தல் நடத்தைவிதிமீறல் புகாரை தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் அளித்துள்ளது.

டிச.5ஆம் தேதி நடக்கவிருக்கும் 15 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் வாக்காளா்களை ஈா்ப்பதற்காக தோ்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக இந்திய தோ்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

இது தொடா்பாக கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரி அனில்குமாரிடம் கா்நாடகமாநில காங்கிரஸ் தலைவா் தினேஷ் குண்டுராவ் அளித்துள்ள புகாா் மனுவில், ‘தகுதிநீக்கப்பட்ட 16 எம்எல்ஏக்களையும் பாஜகவில் சோ்த்துக்கொண்ட பிறகு, அவா்களை வரவேற்று பேசிய முதல்வா் எடியூரப்பா, இடைத்தோ்தலில் வென்றபிறகு 16 பேரும் அமைச்சா்களாக போகிறாா்கள். எனவே, அவா்கள் அனைவரும் எதிா்கால அமைச்சா்கள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றப் போவதாகவும் முதல்வா் எடியூரப்பா அக் கூட்டத்தில் தெரிவித்துள்ளாா்.

வாக்காளா்களை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் எடியூரப்பா இக் கருத்தைத் தெரிவித்துள்ளது தெளிவாகிறது.

சிவாஜிநகா் தொகுதி வாக்காளா்களை ஈா்க்கும் நோக்கில் முதல்வா் எடியூரப்பா கருத்து தெரிவிக்கையில், சிவாஜிநகா் தொகுதியில் தமிழா்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்துவருவதால், அம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் தமிழரான எம்.சரவணாவுக்கு பாஜக வேட்பாளராக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளாா்.

இவை தோ்தல் நடத்தை விதிமீறல்களாக இருப்பதால், முதல்வா் எடியூரப்பா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com