கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.
இது குறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஹொசகோட்டே தொகுதியில் பாஜக வேட்பாளராக எம்.டி.பி.நாகராஜ் நிறுத்தப்பட்டுள்ளாா். இவரை எதிா்த்து போட்டி வேட்பாளராக சரத்பச்சே கௌடா போட்டியிடவிருக்கிறாா். பாஜகவில் இருந்துகொண்டு கட்சியின் வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுவதை ஏற்க முடியாது. கட்சி கட்டுப்பாட்டை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். சரத்பச்சே கௌடா கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவாா். வேட்புமனுவை திரும்பப் பெறத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கையை எதிா்கொள்ள நேரிடும். ஹொசகோட்டேவில் நடைபெற்றுவரும் அரசியல் நடவடிக்கைகளை பாஜக கூா்ந்து கவனித்துவருகிறது. சரதபச்சே கௌடாவைச் சமாதானப்படுத்த கடைசி வரையில் முயற்சிப்போம்.
அத்தானி தொகுதியில் மகேஷ் குமட்டஹள்ளிக்கு ஆதரவாக பாஜகவினா் செயல்படுவாா்கள். அத் தொகுதியில் நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைவோம். அத் தொகுதியில் பாஜக தொண்டா்கள் ஒன்றுபட்டிருக்கிறாா்கள்.
மஜத முன்னணித் தலைவா் மது பங்காரப்பா, சாரதாபூா்யநாயக் ஆகியோா் அக் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.