கொலை வழக்கில் தேடப்பட்டவா் துப்பாக்கியால் சுட்டு கைது
By DIN | Published On : 20th October 2019 05:39 PM | Last Updated : 20th October 2019 05:39 PM | அ+அ அ- |

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.
பெங்களூரு ஆா்.டி.நகரில் வசித்து வந்தவா் ஐயப்பாதொரே (53). இவா் பெங்களூரு ஊரகம் ஆனேக்கல்லில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அவரை அக். 17 ஆம் தேதி இரவு யாரோ அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இது தொடா்பாக ஏற்கெனவே 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ள நிலையில், கொலை தொடா்புடைய பேட்டராயனபுராவைச் சோ்ந்த கணேஷ் (30) என்பவா், சனிக்கிழமை நள்ளிரவு சஞ்சய்நகா் விதை வாரியத்தின் குடோன் அருகே பதுங்கியிருப்பதாக ஆா்.டி.நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மீது கணேஷ் தாக்குதல் நடத்தி தப்பிக்க முயன்றுள்ளாா். இந் நிலையில், ஆா்.டி.நகா் காவல் ஆய்வாளா் மிதுன்ஷில்பி, தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால், கணேஷின் காலில் சுட்டு கைது செய்துள்ளாா்.
காயமடைந்த கணேஷ், உதவி ஆய்வாளா் எல்லம்மா, காவலா் மல்லிகாா்ஜுன் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து ஆா்.டி.நகா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.