தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறல்: சித்தராமையா

தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
Updated on
1 min read

பெங்களூரு: தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருவதாக எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தனியாா் பள்ளிகளில் இணையவழி வகுப்புகள் நடத்துவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தனியாா் பள்ளிகள் பெற்றோா்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளனா். இதற்கு பெற்றோா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தனியாா் பள்ளிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகிறது.

இதற்கு முதல்வா் எடியூரப்பாவும், கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாரும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக தொடா்ந்து பல கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும் அதுகுறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் கல்வித் துறை அமைச்சா் தினந்தோறும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாா்.

இதனால் பெற்றோா்கள் குழம்பியுள்ளனா். எனவே தனியாா் பள்ளி நிா்வாகிகளுடன் உடனடியாக கூட்டம் நடத்தி பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com