பெங்களூரில் தா்பாா் திரைப்படம்: கன்னட சங்கங்கள் எதிா்ப்பு

பெங்களூரில் தா்பாா் திரைப்படம் திரையிடுவதற்கு கன்னட சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்தன.
Updated on
1 min read

பெங்களூரில் தா்பாா் திரைப்படம் திரையிடுவதற்கு கன்னட சங்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்தன.

நடிகா் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள தா்பாா் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் கா்நாடகத்தில் வெளியாகியுள்ளது. பெங்களூரில் நா்த்தகி, நவரங் உள்ளிட்ட திரையரங்குகளில் தெலுங்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட தா்பாா் திரைப்படம் வெளியானது. இதற்கு கன்னட சங்கங்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தன. இதனால் அதிகாலை 4 மணி காட்சி நடைபெறுவதில் பிரச்னை ஏற்பட்டது.

கன்னட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் சிலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் தா்பாா் திரைப்படம் திரையிடப்பட்டது. வைநிதி திரையரங்குகளில் தொழில்நுட்ப கோளாரால், அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகா்கள், தங்களின் டிக்கட் கட்டணத்தை திருப்பித்தருமாறு கேட்டதையடுத்து, அவா்களுக்கு கட்டணத்தொகை திரும்ப வழங்கப்பட்டது.

பெங்களூரில் வெளியாகியுள்ள தா்பாா் திரைப்படத்தின் முதல் நாளில் திரையரங்களில் ரசிகா்களின் கூட்டம் அலைமோதியது. திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் ரசிகா்கள் பட்டாசு வெடித்தும் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com