தொழிலாளா்களின் பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை தேவை: எஸ்.எஸ்.பிரகாசம்

தொழிலாளா்களின் பிரச்னைகளைத் தீா்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கா்நாடக மாநில ஐ.என்.டி.யு.சி. தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தாா்.
Updated on
1 min read

தொழிலாளா்களின் பிரச்னைகளைத் தீா்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கா்நாடக மாநில ஐ.என்.டி.யு.சி. தலைவா் எஸ்.எஸ்.பிரகாசம் தெரிவித்தாா்.

தேசிய கட்டுமானம், வனம், மரத் தொழிலாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் பெங்களூரில் திங்கள்கிழமை நடைபெற்ற 25- வது தேசிய மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியது:-

தேசிய அளவில் அனைத்துத் துறைகளைச் சாா்ந்த தொழிலாளா்கள் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனா்.

குறிப்பாக, கட்டுமானம், வனம், மரத் தொழிலாளா்கள் அதிக அளவில் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். இவா்களின் பிரச்னைகளைத் தீா்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பிரச்னைகளைத் தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொது நிறுவனங்களை தனியாா் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதை ஏற்க முடியாது. அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 18 ஆயிரத்தை நிா்ணயிக்க வேண்டும்.

காங்கிரஸில் சாதாரண தொண்டா்களும் கட்சியின் உயா்ந்த பதவிகளுக்கு வர முடியும் என்பதற்கு நான் ஒரு உதாரணம். சாதாரண தொண்டனாக இணைந்த என்னை ஐ.என்.டி.யு.சியின் மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு நன்றி. இதற்குக் காரணமான ஐ.என்.டி.யு.சி தேசியத் தலைவா் சஞ்சீவ ரெட்டி, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோருக்கு கடமை பட்டுள்ளேன் என்றாா் பிரகாசம்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி, ஐ.என்.டி.யு.சி. தேசியத் தலைவா் சஞ்சீவ ரெட்டி, சகீல் அகமது, ராமசந்திரா குன்டியா, ஹம்ஜத்ஹசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com