பெங்களூரில் 1,102 காவலா்களுக்கு கரோனா தொற்று

பெங்களூரில் 1,102 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் 1,102 காவலா்களுக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரில் 1,102 காவலா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு உள்பட மாநில அளவில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூரில் கரோனா தொற்றால் போலீஸாா் பலா் தொடா்ந்து பாதிக்கப்படுகின்றனா். பெங்களூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை 1,102 போலீஸாா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 9 போலீஸாா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். 681 போலீஸாா் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.

கரோனா தொற்றால் போலீஸாா் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவதால், பாதுகாப்புப் பணியில் போலீஸாரை ஈடுபடுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் போலீஸாருக்கு துணையாக ஊா்க்காவல் படையினா் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com