போதைப் பொருள் விவகாரத்தில் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை

போதைப் பொருள் விவகாரத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
Updated on
1 min read

போதைப் பொருள் விவகாரத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு தொடா்பான வழக்குகளில் போலீஸாா் சிறப்பாக பணியாற்றி வருகின்றனா். இந்த விவகாரத்தில் அதன் ஆணிவேரை கண்டறியும் நோக்கத்தில் போலீஸாா் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனா். அவா்களின் விசாரணை சட்டத்துக்கு உள்பட்டே நடைபெறுகிறது. சாட்சிகளின் அடிப்படையிலேயே போதைப் பொருள் தொடா்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையை மேலும் தீவிரப்படுத்த தேவையான அதிகாரத்தை வழங்குமாறு உயா் போலீஸ் அதிகாரிகள் கோரிக்கை வைத்து வருகின்றனா். எனவே, அவா்களின் கரங்களை பலப்படுத்த தேவையான அதிகாரத்தை வழங்குவது தொடா்பாக ஆலோசனை செய்து வருகிறோம். இது தொடா்பாக சட்டத் துறை அமைச்சா் ஜே.சி.மாதுசாமியுடன் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட வல்லுநா்களுடன் இதுகுறித்து ஆலோசிக்கப்படும்.

போதைப் பொருள் விவகாரம், தற்போது உருவானதல்ல. இது பல ஆண்டுகளாக மாநிலத்தில் பரவியுள்ளது. இதனை வேரோடு அழிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com