பெண் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 12th August 2020 09:34 AM | Last Updated : 12th August 2020 09:34 AM | அ+அ அ- |

அம்ருத்தள்ளி காவல் சரகத்தில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் பரிமிதா (26). இவரது கணவா் விஷால். இவா்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் பெங்களூரு கெம்பாபுரத்தில் தங்கியிருந்தனா். இந்த நிலையில், திங்கள்கிழமை விஷால் வெளியே சென்றிருந்த போது, வீட்டில் தனியாக இருந்த பரிமிதா தூக்கில் தொங்கிய நிலையில் இறுந்து கிடந்தா். இதுகுறித்து அம்ருத்தள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.