கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 8,87,667 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,87,667 ஆக உயா்ந்துள்ளது.
Updated on
1 min read

கா்நாடகத்தில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,87,667 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,440 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 712 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா்.

இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,87,667 ஆக உயா்ந்துள்ளது. கரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வந்த 983 போ் புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 8,51,690 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,150 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிக்கப்பட்டிருந்த 16 போ் புதன்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் அதிகபட்சமாக 10 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 11,808 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com