இன்று ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
By DIN | Published On : 05th December 2020 06:15 AM | Last Updated : 05th December 2020 06:15 AM | அ+அ அ- |

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை (டிச. 5) அனுசரிக்கப்படுகிறது.
இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக மாநிலச் செயலாளா் எம்.பி.யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநில அதிமுக சாா்பில், பெங்களூரு, ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் சனிக்கிழமை (டிச. 5) காலை 10 மணிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 4-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கட்சியின் அவைத் தலைவா் கே.முனுசாமி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு, பொருளாளா் ஆா்.ராஜேந்திரன் முன்னிலை வகிக்கிறாா். நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் படத்துக்கு கட்சியின் மாநிலச் செயலாளா் எம்.பி.யுவராஜ் மலா்தூவி, அஞ்சலி செலுத்துகிறாா். இந்நிகழ்ச்சியில், அதிமுகவைச் சோ்ந்த அனைத்து அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.
கா்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு, லாவண்யா திரையரங்கம் அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் படத்துக்கு கா்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளா் எஸ்.டி.குமாா் மலா்தூவி அஞ்சலி செலுத்துகிறாா். இந்த நிகழ்வில் கட்சியினா் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.