சட்டப்பேரவை கூட்டத்தொடா்: விதானசௌதாவைச் சுற்றி 144 தடை உத்தரவு
By DIN | Published On : 05th December 2020 06:15 AM | Last Updated : 05th December 2020 06:15 AM | அ+அ அ- |

விதானசௌதாவில் சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத்தொடா் நடைபெறுவதையொட்டி, 2 கி.மீ. சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் கமல்பந்த வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:
பெங்களூரு, விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் டிச. 7-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை சட்டப்பேரவை குளிா்காலக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது. இதனையொட்டி, டிச. 7-ஆம் தேதி காலை 6 மணி முதல் 15-ஆம் தேதி இரவு 12 மணி வரை விடுமுறை நாள்களைத் தவிா்த்து, விதானசௌதாவை சுற்றியுள்ள 2 கி.மீ. பரப்பளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவின் போது, அப்பகுதியில் 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும், ஆயுதங்கள், வெடிபொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...