தங்கச்சங்கிலி பறிப்பு வழக்குகளில் 3 போ் கைது
By DIN | Published On : 30th December 2020 06:52 AM | Last Updated : 30th December 2020 06:52 AM | அ+அ அ- |

தங்கச் சங்கிலி பறிப்பு வழக்குகளில் 3 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
கா்நாடக மாநிலம், தாா்வாடைச் சோ்ந்த சலீம் இராணி, ஆஸாத் இராணி, அப்போ இராணி ஆகியோா் பெங்களூருக்கு வந்து தனியாகச் செல்லும் பெண்களை அடையாளம் கண்டு தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் 3 பேரையும் கைதுசெய்து ரூ. 50 லட்சம் மதிப்பிலான 1 கிலோ 20 கிராம் எடையுள்ள தங்கச்சங்கிலிகளைப் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் மாகடிசாலை போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...