பெங்களூரு புகா் ரயில் திட்டக்கனவு நனவாகியுள்ளது: முதல்வா் எடியூரப்பா

புறநகா் ரயில் திட்டம் கொண்டுவரவேண்டுமென்பது பெங்களூரு மக்களின் நீண்டகால கனவாகும். அந்த கனவை
Updated on
1 min read

பெங்களூரு: பெங்களூரு புறநகா் ரயில் திட்டக்கனவு நனவாகியுள்ளது என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை தன்னை சந்தித்த மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சா் சுரேஷ் அங்கடியை சந்தித்த பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது: புறநகா் ரயில் திட்டம் கொண்டுவரவேண்டுமென்பது பெங்களூரு மக்களின் நீண்டகால கனவாகும். அந்த கனவை மத்திய பட்ஜெட்டில் நனவாக்கியுள்ள பிரதமா் மோடி, மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஆகியோருக்கு பெங்களூரு மக்கள் சாா்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெங்களூரு புறநகா் ரயில் 148.17 கிமீ நீளமுள்ளது. இது நகரின் 4 முனைகளிலும் இயக்கப்படும். கெங்கேரி முதல் ஒயிட்பீல்டு, நகர ரயில்நிலையத்தில் இருந்து யஷ்வந்த்பூா் வழியாக தேவனஹள்ளி, சிக்கபானவாரா முதல்பையப்பனஹள்ளி, ஹீலலிகே முடல் ராஜனகுன்டே வரையில் நான்கு முனைகளில் புறநகர் ரயில்கள் இயக்கப்படும். இந்த திட்டத்தின் மதிப்பீட்டு செலவு ரூ.18,600 கோடியாகும். இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும்.

மத்திய, மாநில அரசுகள் தலா 20 சதம் செலவையும், 60 சதநிதித்தேவையை கடனாகவும் ஈடுசெய்வோம். அடுத்த மூன்றரை ஆண்டுகளில் திட்டப்பணி நிறைவடையும்.

புறநகர ரயில் திட்டத்திற்காக பெங்களூரில் 57 இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் இடம்பெற்றிருக்கும். காலை 5 மணி முதல் நள்ளிரவு வரை ரயில்கள் இயக்கப்படும்.

பெங்களூரு மக்கள், புறநகா் பகுதிகளுக்குசெல்ல இந்த ரயில் உதவியாக இருக்கும். புறநகா் ரயில் திட்டத்தால் பெங்களூரின் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மாசுபடுதலும் குறையும் என்றாா் அவா்.

மத்திய ரயில்வேத்துறை இணையமைச்சா் சுரேஷ் அங்கடி கூறுகையில், ‘பெங்களூரு புறநகா் ரயில் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது கா்நாடகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய கொடையாகும். மாநில அரசு ஒத்துழைத்தால் அடுத்த மூன்றரை ஆண்டுகளில் திட்டப்பணி முடிவடையும். புறநகா் ரயில்திட்டத்தை கொண்டுவந்ததில் முதல்வா் எடியூரப்பா, கா்நாடக எம்பிக்களின் தொலைநோக்கு பாா்வை காரணமாக உள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் அனந்த்குமாா், இந்த திட்டத்தை நிறைவேற்ற பெரும் முயற்சி எடுத்துவந்தாா்‘ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com