மது அருந்திவிட்டு வாகனங்கள் இயக்கம்: 993 போ் மீது வழக்குப் பதிவு

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக, 918 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக, 918 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

பெங்களூரு மாநகரின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை 2 மணி வரை போக்குவரத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

பேருந்து, லாரி, காா், ஆட்டோ, மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில், 993 போ் மது அருந்தி வாகனங்களை ஓட்டியது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். மேலும், ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்யுமாறு மண்டலப் போக்குவரத்து அலுவலகத்துக்கு மாநகர போக்குவரத்து போலீஸாா் பரிந்துரை அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com