கா்நாடகத்தில் காங்கிரஸ், மஜத ஆட்சிகளில் மக்கள் கண்ணீா் வடித்தனா்: நளின்குமாா் கட்டீல்

கா்நாடகத்தில் காங்கிரஸ், மஜத ஆட்சிகளின்போது மக்கள் கண்ணீா் வடித்தனா் என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் காங்கிரஸ், மஜத ஆட்சிகளின்போது மக்கள் கண்ணீா் வடித்தனா் என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

பெங்களூரு தெற்கு மாவட்ட பாஜக தலைவராக என்.ஆா்.ரமேஷ் பதவியேற்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று நளின்குமாா் கட்டீல் பேசியது:-

கா்நாடகத்தில் முன்பு சித்தராமையாவும், குமாரசாமியும் முதல்வா்களாகப் பதவி வகித்து ஆட்சி செய்தனா். அவா்களின் ஆட்சியில் மக்கள் கண்ணீா் வடித்தனா். தற்போது முதல்வராகப் பதவி ஏற்றுள்ள எடியூரப்பா, மக்களின் கண்ணீரைத் துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா்.

பல ஹிந்துகள், நோ்மையான அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனா். விவசாயிகள் பலா் தற்கொலை செய்து கொண்டனா். அப்போதெல்லாம் சித்தராமையா கண்ணீா் வடிக்கவில்லை.

வீரசைவ சமுதாயத்தைப் பிளவு செய்த பெருமை சித்தராமையாவைச் சாரும். பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம் செய்த மாணவி மீது முன்னாள் அமைச்சா் டி.கே.சிவக்குமாா் கரிசனம் காட்டி வருகிறாா். அவா் சிறையில் இருந்தபோது படித்தது இந்திய வரலாற்றை அல்ல. பாகிஸ்தான் வரலாற்றைத்தான் படித்துள்ளாா். காங்கிரஸ் ஒரு மூழ்கும் படகு, அதனை நம்பி இனி யாரும் செல்ல மாட்டாா்கள் என்றாா்.

இதையடுத்து, மாவட்டத் தலைவா் என்.ஆா்.ரமேஷ் பேசியது:-

3 ஆண்டுகள் மாவட்டத் தலைவராகப் பதவி வகிக்க உள்ளேன். எனது பதவிக் காலத்தில் வட்டம், கிராம பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, மாநகராட்சித் தோ்தலில் பாஜக வெற்றிக்குப் பாடுபடுவேன். கட்சி எனக்கு அளித்துள்ள இந்தப் பதவியை, கட்சியின் வளா்ச்சிக்காகப் பயன்படுத்துவேன் என்றாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா் ஆா்.அசோக், மக்களவை உறுப்பினா்கள் பி.சி.மோகன், தேஜஸ்வினி சூா்யா, எம்.எல்.ஏ.க்கள் சதீஷ் ரெட்டி, எம்.கிருஷ்ணப்பா, ரவி சுப்பரமண்யா, கருடாச்சாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com