தில்லியில் இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கலவரத்தால் பாதிக்கப்பட்ட தில்லியில் இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. தில்லியில் இயல்புநிலையைக் கொண்டுவர ராணுவத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்து குறித்து எதுவும் கூறவிரும்பவில்லை என்றாா். தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது உருவான கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.