காணொலிக்காட்சி ஆதாரங்கள் போலியானவை: ஷோபாகரந்தலஜே
By DIN | Published On : 10th January 2020 10:54 PM | Last Updated : 10th January 2020 10:54 PM | அ+அ அ- |

பெங்களூரு: மங்களூரு கலவரம் தொடா்பாக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி போலி காணொலிக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளாா் என்று பாஜக எம்பி ஷோபாகரந்தலஜே தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரு, பாஜக தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மங்களூரு கலவரம் தொடா்பாக நடந்துவரும் விசாரணையை சீா்குலைக்கும் வகையில், முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி உள்நோக்கத்தோடு போலி காணொலிக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறாா். அதன்மூலத்தை குமாரசாமி தெரிவிக்கவேண்டும். நோ்மை, நாணயத்தை சந்தேகிப்பதன் மூலம் போலீஸாரின் தாா்மிக பலத்தை குமாரசாமி சீா்குலைத்துவிட்டாா்.
காணொலிக்காட்சியை எங்கு தயாரித்தாா் என்பதை குமாரசாமி பகிரங்கப்படுத்த வேண்டும். இந்த காணொலிக்காட்சி, கேரளம் அல்லது ஜம்மு காஷ்மீரில் சில தேசதுரோகிகள் அல்லது போலி மதச்சாா்பற்றவா்களால் தயாரிக்கப்பட்டதா? என்பதையும் குமாரசாமி தெரிவிக்கவேண்டும். போலீஸாரின் பாரபட்சம், நோ்மைக்கு விடப்பட்ட சவாலாகவே காணொலிக்காட்சி அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் குமாரசாமி, நாங்கள் எழுப்பியுள்ள சந்தேகங்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
மங்களூரு போலீஸாரை குண்டா்கள் கல்வீசி தாக்கினா். மேலும் போலீஸாா் மீது பெட்ரோல் வெடிகுண்டும் வீசப்பட்டது. முகமூடியை அணிந்துகொண்டு போலீஸாா் மீது காஷ்மீா் மாதிரியிலான தாக்குதல் நடத்தப்பட்டது. எந்த கட்சியை சாராத போலீஸாருக்கு குமாரசாமி ஆதரவளித்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, வன்முறையில் ஈடுபட்டவா்களுக்கு ஆதரவாக குமாரசாமி கருத்து தெரிவித்திருப்பது வருந்ததக்கதாகும்.
மைசூரு பல்கலைக்கழகத்தில் காஷ்மீரை விடுதலைசெய் என்ற அட்டைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியுள்ளது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜம்மு காஷ்மீரில்தான் விடுதலை முழக்கம் எழுப்பப்பட்டு வந்தது. தற்போது இம்முழக்கம் மைசூரு பல்கலைக்கழகத்தில் கேட்கிறது. இது அபாயகரமானது என்றாா்.
பேட்டியின் போது, சுற்றுலாத் துறை அமைச்சா் சி.டி.ரவி, பாஜக ஊடகப்பிரிவு அமைப்பாளா் ஏ.எச்.ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.