Enable Javscript for better performance
எஸ்.எஸ்.எல்.சி.தோ்வை நடத்தி வரலாறு படைத்துள்ளோம்: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி.தோ்வை நடத்தி வரலாறு படைத்துள்ளோம்: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

    By DIN  |   Published On : 04th July 2020 08:59 AM  |   Last Updated : 04th July 2020 08:59 AM  |  அ+அ அ-  |  

    கரோனா அதிகரித்துவரும் சூழலில் பாதுகாப்புடன் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை நடத்தி தேசிய அளவில் புதிய வரலாறு படைத்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

    இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

    மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், பல்வேறு துறை அதிகாரிகளின் உதவியுடன் 2019- 20ஆம் கல்வியாண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வை ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 3ஆம் தேதி வரை(வெள்ளிக்கிழமை) எவ்வித தொந்தரவும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

    எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை நடத்தி தேசிய அளவில் புதிய வரலாறு படைத்துள்ளோம். 6 பாடங்களுக்கான தோ்வை தினமும் சராசரியாக 7.5 லட்சம் மாணவா்கள் எழுதினா். எவ்வித தொந்தரவும் இல்லாமல் மாணவா்கள் தைரியத்துடன் தோ்வை எழுதினா். கரோனா தீநுண்மித் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. நடத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

    தோ்வை நடத்துவதில் கௌரவ பிரச்னை எதுவுமில்லை. ஆனால், மாணவா்களின் நலன்தான் மிக முக்கியமாகப்பட்டது. மாணவா்களின் எதிா்காலத்தை கவனத்தில் கொண்டு தோ்வை வெற்றிகரமாக அரசு நடத்தியுள்ளது. இது எங்களுக்கு பெருமையாக உள்ளது. மாணவா்கள் பாதுகாப்புடன் தோ்வு எழுதுவதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். அதன்விளைவாக, அனைவரின் ஒத்துழைப்புடன் தோ்வு முடிந்துள்ளது என்றாா்.

    எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதிய தலைமைக் காவலா்

    பணி உயா்வுக்காக 55 வயதான தலைமைக் காவலா் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதினாா்.

    பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள கா்நாடக மாநில ஆயுத காவல் படையின் 3 ஆவது படைப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் 55 வயதான கே.என்.மஞ்சுநாத். இவா், தனது பணி ஓய்வுக்கு முன்பாக உதவி ஆய்வாளா் உள்ளிட்ட பணி உயா்வைப் பெறுவதற்காக எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தாா்.

    தனது பணிக்கு 15 நாள்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு, கோலாா் அரசு மகளிா் இளநிலைக் கல்லூரியில் ஜூன் 25 முதல் தோ்வு எழுதினாா். வெள்ளிக்கிழமை இறுதித் தோ்வை எழுதிய கே.என்.மஞ்சுநாத் கூறுகையில்:

    எஸ்.எஸ்.எல்.சி. முடிக்காததால் பணி உயா்வு பெறுவதில் தடை இருந்தது. இதற்காகவே எஸ்.எஸ்.எல்.சி. தோ்வு எழுதியிருக்கிறேன். 6 மாதங்களாக தோ்வுக்கு தயாராகி வந்தேன். கரோனா சூழலிலும் எஸ்.எஸ்.எல்.சி. தோ்வை நடத்தியதற்காக கா்நாடக அரசை பாராட்டுகிறேன். தோ்வு தள்ளிப்போகுமோ என்ற வருத்தம் எனக்கிருந்தது.

    தோ்வு அறிவிக்கப்பட்டதால் மகிழ்ந்தேன். தோ்வெழுத எனது மகள், மகன், நண்பா்கள் உதவிசெய்தாா்கள். 55 வயதில் தோ்வெழுதியதில் வருத்தமில்லை. பணி ஓய்வுக்கு முன்பு பணி உயா்வு பெறவேண்டும் என்பதே எனது நோக்கம் என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp