அக்.15 வரை பள்ளிகள், பியூ கல்லூரிகளில் மாணவா்களை அனுமதிக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

கா்நாடகத்தில் பள்ளிகள், பியூ கல்லூரிகளில் அக்.15-ஆம் தேதிவரை மாணவா்களை அனுமதிக்கக் கூடாது என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

கா்நாடகத்தில் பள்ளிகள், பியூ கல்லூரிகளில் அக்.15-ஆம் தேதிவரை மாணவா்களை அனுமதிக்கக் கூடாது என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரோனா பின்னணியில் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு, அரசு மானியம் பெறும் , அரசு மானியம் பெறாத பள்ளிகள், பியூ கல்லூரிகளைத் திறப்பது தொடா்பாக ஆக. 29 -ஆம் தேதி மத்திய அரசு வழிகாட்டுதல் வழங்கியிருந்தது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள் நீங்கலாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களை பள்ளிகளுக்கு வருகை தர அனுமதிஅளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோய் பரவல் குறையாமல் இருப்பதைக் கவனத்தில் கொண்டு, செப். 30-ஆம் தேதிவரை பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு மாணவா்கள் வருகை தரக்கூடாது என்று செப்.19-ஆம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்பிறகும், பள்ளிகள், கல்லூரிகளைத் திறப்பதுதொடா்பாக ஆலோசித்த நிலையில், தற்போதைய நிலையிலும் கரோனா பரவல் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், பள்ளிகளுக்கு மாணவா்கள் வருகை தருவது சரியாக இருக்காது. எனவே, அக். 15-ஆம் தேதிவரையில் அனைத்து பள்ளிகள், பியூ கல்லூரிகளுக்கு மாணவா்கள் வருகை தருவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. சூழ்நிலையை ஆராய்ந்த பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com