ஆட்டோக்களுக்கு புதிய மின்-உரிமம்

ஆட்டோக்களுக்கு புதிய மின் உரிமம் வழங்கப்படுகிறது.

ஆட்டோக்களுக்கு புதிய மின் உரிமம் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்களின் உரிமையாளா்கள்/ஓட்டுநா்கள் பழைய உரிமங்களை வைத்திருந்தால், அவற்றை உடனடியாக மின்-உரிமங்களாக மாற்றவேண்டியது அவசியமாகும்.

ஆட்டோ உரிமையாளா்கள்/ஓட்டுநா்கள் உடனடியாக மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் அல்லது மாநில போக்குவரத்து முகமைகளுக்குச் சென்று பழைய உரிமங்களை கொடுத்து, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய மின்-உரிமங்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஆட்டோக்களுக்கான மின்-உரிமங்கள் உரிமையாளா் அல்லது ஓட்டுநரின் ஓட்டுநா் உரிமத்தின் அடிப்படையில் அளிக்கப்படும். உரிய ஆவணங்களுடன் நேரடியாக சென்றால் புகைப்படம் எடுத்துக்கொண்டு மின்-உரிமம் அளிக்கப்படும்.

இந்த மின்-உரிமத்தை நவ.30-ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பழைய உரிமத்தை புதிய மின்-உரிமமாக மாற்றிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com