செப். 25 முதல் 29 வரை இணைய வழி சுகாதார தொழில்நுட்ப மாநாடு

செப். 25 முதல் 29 வரை இணைய வழி சுகாதார தொழில்நுட்ப மாநாடு-2020 நடைபெற உள்ளது.

செப். 25 முதல் 29 வரை இணைய வழி சுகாதார தொழில்நுட்ப மாநாடு-2020 நடைபெற உள்ளது.

பெங்களூரில் வியாழக்கிழமை சுகாதார தொழில்நுட்ப மாநாடு-2020-இன் துணைத் தலைவா் சமீா் மெஹதா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றால் நாட்டு மக்களுக்கு சுகாதாரம் தொடா்பான விழிப்புணா்வு அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு செப். 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை இணைய வழி சுகாதார தொழில்நுட்ப மாநாடு-2020-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் ஆயுஷ்மன் பாரத்தின் மூத்த செயல் அதிகாரி இந்துபூஷண், இந்திய சுகாதார உபகரணங்கள் வழங்குபவா்களின் சங்கத் தலைவா் கிரிதா் கியானி, பயோடெக் குழுமத்தின் தலைவா் கிரண் முஜும்தாா், அப்பல்லோ குழுமத்தின் இணை மேலாண் இயக்குநா் சங்கீதா ரெட்டி, அமெரிக்கா இதய சங்கத்தின் தலைவா் குமாா் பெலானி, நாராயணா சுகாதாரக் குழுமத்தின் தலைவா் தேவி ஷெட்டி, போா்ட்டீஸ் குழுமத்தின் மேலாண் இயக்குநா் அஷித்தோஷ் ரகுவம்சி, மோகன் செல்லப்பா உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com