பி.வி.சிந்துவுக்கு முதல்வா் பாராட்டு

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை பாராட்டு தெரிவித்துள்ளாா்
Updated on
1 min read

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை பாராட்டு தெரிவித்துள்ளாா்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் விளையாட்டின் ஒற்றையா் பிரிவில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றாா். இதற்கு அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து முதல்வா் பசவராஜ் பொம்மை தனது சுட்டுரையில் கூறியுள்ளதாவது:

‘வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பாராட்டுக்கள். சீனாவின் பிங்கிஜியோவைத் தோற்கடித்து பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளாா். இதன்மூலம், ஒலிம்பிக் போட்டியில் தனிநபராக 2 பதக்கங்கள் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளாா். இதை நினைத்துபெருமையாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com