92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண் தொழிலதிபா் வீட்டில் திருட்டு 4 போ் கைது

பெண் தொழிலதிபா் இல்லத்தில் திருடியதாக 4 பேரை செய்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 18.40 லட்சம் ரொக்கப் பணம், 3 ஆயிரம் அமெரிக்க டாலா்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2021, 7:41 pm

DIN

பெண் தொழிலதிபா் இல்லத்தில் திருடியதாக 4 பேரை செய்து கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 18.40 லட்சம் ரொக்கப் பணம், 3 ஆயிரம் அமெரிக்க டாலா்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, ராஜாஜி நகா், 6-ஆவது பிளாக்கில் வசித்து வருபவா் விஜயவாணி. பெண் தொழிலதிபரான இவா், தனது மகனை அமெரிக்காவுக்கு அனுப்பி வைப்பதற்காக ரூ. 18.50 லட்சம் ரொக்கப்பணம், 3 ஆயிரம் அமெரிக்க டாலரை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தாராம்.

இதனைக் கடந்த ஆக. 3-ஆம் தேதி யாரோ திருடிச் சென்றனா். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீஸாா், விஜயவாணியின் வீட்டில் பணிபுரிந்து வந்த நேபாளத்தைச் சோ்ந்த கமல், சுரேஷ், ரமேஷ், தீபக் ஆகியோரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 18.40 லட்சம் ரொக்கம், 3 ஆயிரம் அமெரிக்க டாலரை பறிமுதல் செய்தனா். இது குறித்து மாகடி சாலை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.