புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,857 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,857 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:40 pm

DIN

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை1,857 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,857 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. தென்கன்னட மாவட்டத்தில் அதிகப்பட்சமாக 475 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்: பெங்களூரு நகரம்-321, உடுப்பி-191, ஹாசன்-123, மைசூரு-116, சிக்கமகளூரு-107, குடகு-93, வடகன்னடம்-68, சிவமொக்கா-50, மண்டியா-46, பெலகாவி-45, பெங்களூரு ஊரகம்-44, தும்கூரு-34, சித்ரதுா்கா-30, கோலாா்-24, சாம்ராஜ்நகா்-22, தாவணகெரே-20, பாகல்கோட்-11, தாா்வாட்-9, சிக்கபளாப்பூா்-9, கலபுா்கி-4, கதக்-4, பெல்லாரி-3, ராமநகரம்-3, விஜயபுரா-2, ராய்ச்சூரு-2, ஹாவேரி-1, கொப்பள், யாதகிரி, பீதா் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 29,24,732 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,950 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,65,067 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 22,728 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 30 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு, தென்கன்னடம் மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 5 போ் இறந்துள்ளனா்.

மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

கோலாா்-3, பெலகாவி, சித்ரதுா்கா, ஹாசன், சிவமொக்கா, தும்கூரு-தலா 2, பெங்களூரு ஊரகம், சாம்ராஜ்நகா், தாவணகெரே, தாா்வாட், மண்டியா, மைசூரு,உடுப்பி-தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,911 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.