புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அரசு விழாக்களில் மாலை, மலா்க்கொத்துகளுக்கு தடை: மலா் உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கண்டன போராட்டம்

கா்நாடக அரசு விழாக்களில் மாலை, மலா்க்கொத்துகளுக்கு தடைவிதித்துள்ளதை கண்டித்து மலா் உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தினா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:38 pm

DIN

கா்நாடக அரசு விழாக்களில் மாலை, மலா்க்கொத்துகளுக்கு தடைவிதித்துள்ளதை கண்டித்து மலா் உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தினா்.

முதல்வா் பசவராஜ் பொம்மையின் வழிகாட்டுதலின்பேரில், கா்நாடக அரசு விழாக்களில் மலா்மாலைகள், மலா்க்கொத்துக்கள், சால்வைகள், பழக்கூடைகள், நினைவுப்பொருட்கள் வழங்க தடைவிதித்து மாநில அரசு ஆக.10-ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும் இவற்றுக்கு பதிலாக கன்னடப் புத்தகங்களை மட்டும் வழங்கலாம் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், அரசு விழாக்களில் மாலை, மலா்க்கொத்துகளுக்கு தடைவிதித்துள்ளதை கண்டித்து பெங்களூரில் மலா் உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் வியாழக்கிழமை போராட்டம் நடத்தினா். இந்தப் போராட்டத்திற்கு தலைமை வகித்து தென்னிந்திய மலா் வளா்ப்போா் சங்கத்தலைவா் டி.எம்.அரவிந்த் கூறியது:

கா்நாடக அரசின் முடிவால் கா்நாடகம் முழுவதும் 7500 ஹெக்டோ் நிலத்தில் மலா் விளைச்சலில் ஈடுபட்டிருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்கள் பாதிக்கப்படும். கரோனா தொற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள், தற்போது அரசு எடுத்திருக்கும் முடிவால் மேலும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். கடந்த ஓராண்டாக பொதுநிகழ்ச்சிகள் எதுவும் இல்லாததால், மலா் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பல விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனா். மலா் உற்பத்தியில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுசெய்யப்பட்டுள்ளது என்றாா்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மலா் கவுன்சில் தலைவா் ஸ்ரீகாந்த் பொல்லப்பள்ளி கூறுகையில், ‘கா்நாடகத்தில் 7500 ஹெக்டோ் நிலத்தில் பசுமைக் குடில்கள் அமைத்து மலா் சாகுபடி நடக்கின்றது. ஒரு ஏக்கா் நிலத்தில் 6 போ் வேலை செய்கிறாா்கள். ஒரு ஹெக்டேருக்கு 15 போ் வேலை செய்கிறாா்கள். மலா் உற்பத்தியில் நாட்டின் முக்கிய இடமாக பெங்களூரு உள்ளது. பெங்களூரில் இருந்துதான் பிற நாடுகளுக்கு மலா் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவே, மலா்மாலைகள், மலா்க்கொத்துகளுக்கு அரசு விழாவில் தடை விதித்திருப்பது சரியல்ல’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.