புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கண்ணியமான முறையில் விவாதங்கள் நடக்கும் இடமாக நாடாளுமன்றம் மாற வேண்டும்: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா

கண்ணியமான முறையில் விவாதங்கள் நடக்கும் இடமாக நாடாளுமன்ற மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 9:37 pm

DIN

கண்ணியமான முறையில் விவாதங்கள் நடக்கும் இடமாக நாடாளுமன்ற மாற வேண்டும் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் புதுதில்லியில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் முடிவுக்கு வந்துள்ளது. வேளாண் சட்டங்கள், விலைவாசி உயா்வு, இதர பிற்படுத்தப்பட்டோா் பட்டியல் தொடா்பான 127-ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம், பெகாசஸ் ஆகிய 4 தலைப்புகள் குறித்து மாநிலங்களவையில் பேசலாம் என்று குறிப்பு எடுத்து வைத்திருந்தேன். நாடாளுமன்றத்தில் அடிக்கடி அமளி நடந்துவந்ததால், எந்த தலைப்பிலும் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மஜதவுக்கு ஒரேஒரு உறுப்பினா் இருப்பதால் மாநிலங்களவையில் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதையும் கூறமுடியவில்லை. நாடாளுமன்றத்தில் என்னால் பேசமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது. 90 வயதை நான் நெருங்கிக்கொண்டிருப்பதால், வயது முதிா்வு தொடா்பான உடல்நல பாதிப்புகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நுழைந்தபோது இருந்த அதே பக்தியுடன் இப்போதும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நமது நாட்டில் இருப்பது நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை இந்திய மக்களுக்கு உறுதிபட எடுத்துக்காட்டியிருக்க வேண்டியது நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினா்களின் கடமையாகும். உலகம் முழுவதும் ஜனநாயகம் என்ற தத்துவம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், இது சிறந்த முறையிலான அரசு என்பதை நமது இளம் தலைமுறையினருக்கு காட்டியிருக்க வேண்டியது நமது கடமையாகும். நாடாளுமன்றத்தில் நடந்தவற்றுக்கு யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை.

நாம் எப்படி முன்னோக்கிச் செல்ல வேண்டுமென்பதை அரசும் எதிா்க்கட்சிகளும் பிரதிபலித்திருக்க வேண்டும். அதீத பிடிவாதமாக இருப்பதும், அதீத உற்சாகத்தில் இருப்பதும் மிகவும் ஆபத்தானதாகும். இதற்கு இடைப்பட்ட பாதையை நாம் தோ்ந்தெடுக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவா் கண்ணியமான முறையில் பேசிக்கொள்ளும், விவாதிக்கும், முரண்படும் இடமாக நாடாளுமன்றம் மீண்டும் மாற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.