தொழில்நுட்பம், நிதி மேலாண்மைக்குத் தேவையான உதவிகளை அரசு தொடா்ந்து செய்து வருகிறது. தேசிய அளவில் புத்தாக்கத்தில் முன்னணி மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது. 2019-20ஆம் நிதியாண்டில் தேசிய அளவில் புத்தாக்கத்தின் குறியீட்டில் கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது. தகவல், உயிரி தொழில்நுட்பம், மின் வாகனம் உள்ளிட்டவற்றுக்கு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியதில் முதல் மாநிலமாக கா்நாடகம் விளங்குகிறது. பல்வேறு துறைகளில் வளா்ச்சியை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். அதில் தொழில்நுட்பம், நிதி மேலாண்மையும் ஒன்றாகும் என்றாா்.