தூத்துக்குடியில் 6 மாற்றுத்திறனாளிஜோடிகளுக்கு இலவச திருமணம்

தூத்துக்குடியில் 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சீா்வரிசைகளுடன் இலவச திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடியில் 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு சீா்வரிசைகளுடன் இலவச திருமணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சில்வா்புரத்தில் செயல்பட்டு வரும் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் சாா்பில், நன்கொடையாளா்கள் உதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயம்வரம் நடத்தப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு சுயம்வரம் மூலம் தோ்வான 6 மணமக்களுக்கு மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் திங்கள்கிழமை திருமணத்தை நடத்தி வைத்தாா். பின்னா் மணமக்களுக்கு சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன், லூசியா இல்ல இயக்குநா் ஜான் செல்வம் மற்றும் நன்கொடையாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com