விதிமீறிய 3,000 வாகனங்கள் பறிமுதல்

பொதுமுடக்கத்தின்போது விதிமீறிய 3,000 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

பொதுமுடக்கத்தின்போது விதிமீறிய 3,000 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் ஏப். 28 ஆம் தேதி முதல் மே 24-ஆம்தேதி வரை பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இக்காலக் கட்டத்தில் அவசரத் தேவைகள் தவிர பொதுவான வாகனங்களின் நடமாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைப் பொருள்படுத்தாமல் தடையை மீறி வாகனங்களில் சென்றவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதோடு 3,000 வாகனங்களை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இதில் 2,723 இருசக்கர வாகனங்கள், 171 மூன்று சக்கர வாகனங்கள், 106 நான்கு சக்கர வாகனங்கள் அடக்கம் என்று பெங்களூரு மாநகரக் காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com