பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு பத்திரம் வழங்க ஆலோசனை

பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு பாக்கியலட்சுமி திட்டத்தைப்போல பத்திரம் வழங்க ஆலோசித்து வருகிறோம் என்று மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே தெரிவித்தாா்.
Updated on
1 min read

பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு பாக்கியலட்சுமி திட்டத்தைப்போல பத்திரம் வழங்க ஆலோசித்து வருகிறோம் என்று மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே தெரிவித்தாா்.

பெங்களூரு விகாஸ்சௌதாவில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பல குழந்தைகள் பெற்றோா்களை இழந்துள்ளனா். அவா்களின் வளா்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.

பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு பாக்கியலட்சுமி திட்டத்தில் பத்திரம் வழங்குவது போன்றே, பத்திரம் வழங்க ஆலோசித்து வருகிறோம். இதுதொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றி தகவல் அளிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்துள்ளோம். இப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் என்பவரை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்துள்ளோம்.

பெற்றோரை இழந்த குழந்தைகளைப் பேணிகாக்க அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் மையங்கள் தொடங்கப்படும். அந்தக் குழந்தைகளை அரசின் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தனிமைப்படுத்தி தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும். 6 வயதிற்குட்ட குழந்தைகளை அதிக கவனத்துடன் பேணி காக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோா்களை இழந்த குழந்தைகளை யாரேனும் தத்து எடுக்க விரும்பினால், விதிகளுக்கு உட்பட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா 3-வது அலையின்போது குழந்தைகளும் பாதிக்கப்படுவாா்கள் என வல்லுநா்கள் கூறுவதால், அது தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com