எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வையொட்டி 144 தடை உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி துணைத்தோ்வையொட்டி தோ்வு மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

எஸ்.எஸ்.எல்.சி துணைத்தோ்வையொட்டி தோ்வு மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாநில அளவில் செப். 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி பெங்களூருவில் உள்ள தோ்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டா் சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது மையங்களைச் சுற்றி 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com