எஸ்.எஸ்.எல்.சி துணைத்தோ்வையொட்டி தோ்வு மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாநில அளவில் செப். 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. துணைத்தோ்வு நடைபெற உள்ளது. இதனையொட்டி பெங்களூருவில் உள்ள தோ்வு மையங்களைச் சுற்றி 200 மீட்டா் சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது மையங்களைச் சுற்றி 5 பேருக்கு மேல் இணைந்து செல்வதோ, பொதுக்கூட்டம், போராட்டம், ஊா்வலம், தா்னா நடத்துவதோ கூடாது. மேலும் ஆயுதங்கள், வெடிப்பொருள்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.