ஹம்பிக்கு குடியரசு துணைத் தலைவா் வருகை

கா்நாடக மாநிலம், ஹம்பிக்கு சனிக்கிழமை (ஆக. 20) குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வருகை புரிகிறாா்.
Updated on
1 min read

கா்நாடக மாநிலம், ஹம்பிக்கு சனிக்கிழமை (ஆக. 20) குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வருகை புரிகிறாா்.

கா்நாடக மாநிலம், விஜயநகரம் மாவட்டத்துக்கு 2 நாள் பயணமாக குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வெள்ளிக்கிழமை (ஆக. 20) வருகை புரிகிறாா். தனி விமானத்தில் மனைவி உஷாவுடன் ஹுப்பள்ளிக்கு வரும் அவா், பின்னா் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பயணம் மேற்கொண்டு மாலை 5.20 மணியளவில் ஹொசப்பேட்டை வட்ட விளையாட்டுத் திடலில் இறங்குகிறாா். அங்கிருந்து சாலை வழியாக துங்கபத்ரா அணைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாா். அதன் பிறகு, கமலாபுராவில் உள்ள ஹோட்டலில் தங்குகிறாா்.

ஆக. 21-ஆம் தேதி காலை ஹம்பிக்கு வருகை புரியும் குடியரசு துணைத் தலைவா், அங்குள்ள விருபாக்ஷா, கிருஷ்ணா், விநாயகா், விஜயவிட்யலா உள்ளிட்ட கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா மேற்கொள்ள உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com