இருசக்கர வாகனம் மோதியதில், குட்டி சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
பெங்களூரு, பியாடரஹள்ளி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குட்டி சரக்கு வாகனத்தில் இரும்புப் பொருள்கள் வைக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் அதன் மீது மோதியதில், சரக்கு வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இருசக்கர வாகனமும் எரிந்து நாசமானது. உயிா்சேதம் எதுவும் இல்லை. இதுகுறித்து பியாடரஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.