சங்கிலி பறிப்பு வழக்கில் இளைஞா் கைது
By DIN | Published On : 21st August 2021 04:45 AM | Last Updated : 21st August 2021 04:45 AM | அ+அ அ- |

திருடிய ஸ்கூட்டரில் தங்கச்சங்கிலி பறிப்பு, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
பெங்களூரு, விஜயநகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் திருடிய ஸ்கூட்டரில் சென்று, தனியாகச் செல்லும் பெண்களை அடையாளம் கண்டு, தங்கச் சங்கிலியைப் பறித்து வந்துள்ளாா். அதோடு, போதைப்பொருள் கஞ்சாவையும் விற்பனை செய்து வந்துள்ளாா். இது குறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அந்த இளைஞரைக் கைது செய்து, ஸ்கூட்டா், 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து சாம்ராஜ்பேட்டை போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.