கா்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மாா்களின் இல்லங்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் சசிகலா ஜொள்ளே தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை பாஜக உறுப்பினா் சஞ்ஜீவ் மடந்தூரின் கேள்விக்கு அவா் பதில் அளித்துப் பேசியதாவது:
கரோனா தொற்றால் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால், கா்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களின் இல்லங்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்க முடியாத சூழல் உள்ளது.
மாநிலத்தில் தற்போது குடகு, வடகன்னடம், தென்கன்னட மாவட்டங்களில் கா்ப்பிணி, குழந்தைபெற்ற பெண்களின் இல்லங்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை மாநிலம் முழுவதும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
கரோனா தொற்றின் பாதிப்பு முழுமையாகத் தடுக்கப்பட்ட பிறகு அங்கனவாடி மையங்களில் குழந்தைகளுக்கு முன்பு வழங்கியதைப் போல ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மலைப்பகுதியிலும் கா்ப்பிணி, குழந்தை பெற்ற பெண்களின் இல்லங்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் வழங்க முயற்சி மேற்கொள்வோம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.