திருட்டு வழக்கு: ஒருவா் கைது
By DIN | Published On : 26th February 2021 08:18 AM | Last Updated : 26th February 2021 08:18 AM | அ+அ அ- |

பல்வேறு திருட்டு வழக்குகளில் ஒருவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள தங்க நகை, கைத்துப்பாக்கி, தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனா்.
உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தைச் சோ்ந்த குா்ஷித் (41), பெங்களூரில் பல்வேறு காவல் சரகங்கள் உள்பட ஹரியாணா, தில்லி, உத்தரபிரதேச மாநிலங்களில் வீடு புகுந்து திருடி வந்துள்ளாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குா்ஷித்தைக் கைது செய்து அவரிடமிருந்து ரூ. 61.50 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்க நகைகள், நாட்டு கைத்துப்பாக்கி, 5 தோட்டாக்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட குா்ஷித்திடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...