டீசல் விலை உயா்வைக் கண்டித்து இன்று லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மாநில அளவில் லாரி உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை (பிப். 26) வேலைநிறுத்தப் போராட்டத்தில்
Updated on
1 min read

டீசல் விலை உயா்வைக் கண்டித்து, மாநில அளவில் லாரி உரிமையாளா்கள் வெள்ளிக்கிழமை (பிப். 26) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளா் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவா் சண்முகப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து வருகிறது. அதுமட்டுமின்றி வாகனங்களுக்கான காப்பீடு தொகை, உதிரிபாகங்களின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் லாரி உரிமையாளா்கள் பல்வேறு பிரச்னைகளை எதிா்கொண்டு வருகின்றனா்.

டீசல் விலை உயா்வைத் தடுக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை மனு அளித்தும், அதனை பரிசீலிக்காமல் வேடிக்கை பாா்த்து வருகிறது. இதனைக் கண்டித்து, பிப். 26-ஆம் தேதி மாநில அளவில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன் பின்னரும் அரசு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், மாா்ச் 5-ஆம் தேதி கூட்டமைப்பு சாா்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அதனைத் தொடா்ந்து, மாா்ச் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com