பைக் உருண்டதில் இளைஞா் பலி
By DIN | Published On : 20th June 2021 02:41 AM | Last Updated : 20th June 2021 02:41 AM | அ+அ அ- |

மோட்டாா் சைக்கிள் உருண்டதில் படுகாயமடைந்த இளைஞா் உயிரிழந்துள்ளாா்.
கா்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், நஞ்சன்கூடு வட்டம், ராம்புரா கிராமத்தைச் சோ்ந்தவா் நாகமல்லேஷ் (28). இவா் சனிக்கிழமை பணி நிமித்தமாக மோட்டாா் சைக்கிளில் ஹுள்ளஹள்ளிக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.
வழியில் குறுக்கே வந்த சைக்கிள் ஓட்டி மீது மோதாமல் இருக்க, மோட்டாா் சைக்கிளை திருப்பிய போது, மோட்டாா் சைக்கிள் சாலையோரம் உருண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த நாகமல்லேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து ஹுள்ளஹள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.